Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.பி.எஸ்.வாழ்க்கை பிய்ந்து விடும்: ஸ்டாலின்

ஏப்ரல் 14, 2019 07:37

திருச்சி: தேர்தல் முடிவு வந்ததும், முதல்வர், இ.பி.எஸ்.,சின் வாழ்க்கை பிய்ந்து விடும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். திருச்சி லோக்சபா தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, நேற்று நடந்த கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கான அறிக்கையாக உள்ளது. ' 

நீட்' தேர்வு ரத்து, விவசாய கடன்கள் ரத்து ஆகியவை, வரவேற்கத்தக்க அம்சங்களாக உள்ளன.தி.மு.க., கூட்டணி, கொள்கை அளவில் அமைந்துள்ளது. கோடநாடு விவகாரம், பொள்ளாச்சி, ஜெ., மரணத்தில் மர்மம் குறித்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு, இதுவரை முதல்வர், இ.பி.எஸ்., பதில் தரவில்லை. 

இந்த கேள்விகளால், இ.பி.எஸ்., என் மீது கோபமடைந்து, 'அவர் என்னைப் பற்றி பேச ஆரம்பித்தால் காது செவுள் பிய்ந்து விடும்' என, பேசியுள்ளார்.நான் சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வந்ததும், தி.மு.க., ஆட்சி வரும். உங்கள் வாழ்க்கையே பிய்ந்து விடும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்.இவ்வாறு, அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்